பெஜாவர் மடத்தின் விஸ்வேஸ்வரதீர்த்த சுவாமிகள் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் சாதுர்மாத விரதம் ஏற்று மைசூரில் தங்கியிருந்தார். பெஜாவர் சுவாமிகள், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் எனவும் மிகவும் விரும்புகிறவர். அவர் மைசூரில் தங்கியிருப்பதை அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் அவரை அணுகி, பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளில் விளக்கேற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவரும் மனமுவர்ந்து ஒப்புக் கொண்டார்.
பெஜாவர் சுவாமிகளும் தினசரி பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வந்தார். இதை கண்ட சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் ஜாதி சன்னியாசியை எங்கள் பகுதி வீடுகளுக்கு அழைத்து வருவது போல, எங்கள் ஜாதி சன்னியாசி ஒருவரை உயர் ஜாதி வீடுகளுக்கு அழைத்து செல்ல முடியுமா என்று சவால் விட்டனர்.
அந்த சவாலை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டது. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மதிக (madiga) இனத்தைச் சேர்ந்த துறவி சித்ரதுர்கா ஸ்ரீ பசவமூர்த்தி மதரா சென்னைய சுவாமிகளை பிராமணர்கள் வசிக்கும் தெருவிற்கு அழைத்து சென்றனர்.
ஸ்ரீ பசவமூர்த்தி சுவாமிகள் அந்த பகுதிக்கு வந்த போது, அந்த பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தெரு முழுவதும் காவிக் கொடிகள் பறந்தன. தெருக்களில் கோலம் போடப்பட்டு மங்களகரமாக காட்சியளித்தது. சுவாமிகள் ஒவ்வொரு வீடாக சென்றார். சுவாமிகளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கையால் விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டனர். சுவாமிகளும் மிகவும் சந்தோஷமாக அதை நிறைவேற்றினார்.
ஆரம்பத்தில் ஸ்ரீ பசுவமூர்த்தி சுவாமிகளுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட ஆத்மார்த்தமான வரவேற்பு, மரியாதை அவரை நெகிழ வைத்தது.
பெரிய பெரிய ஆர்ப்பாட்டம் இல்லை. போராட்டம் இல்லை. ஒரு பெரிய புரட்சி அமைதியாக நடைபெற்றது.
சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக