ராஜஸ்தான் மாநிலம், தெளசா மாவட்டத்தில் உள்ள மட்லானா கிராம ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் இதற்கு முற்றுபுள்ளி வைக்க விரும்பினார்கள். இந்த ஊரில் ஷாகா ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் அந்த கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடைபெற இருந்தது. அதையொட்டி மணமகன் குதிரை சவாரி செய்யும் நிகழ்ச்சியை ஊர் பெரியவர்களின் நல்லாசியுடன் நடத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் விரும்பினார்கள்.
ஸ்வயம்சேவகர்கள் எல்லா ஜாதி தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசி அவர்களின் ஆதரவை பெற்றனர். குறிப்பிட்ட தேதியில் மணமகன் குதிரை சவாரி செய்யும் நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறினார்கள். இது அந்த ஊரில் மட்டுமல்லாமல், பக்கத்து பல ஊர்களிலும் பேசும் பொருள் ஆகியது.
அதற்கு பிறகு அந்த கிராமத்தில் குதிரை சவாரி விஷயத்தில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள்; இந்துக்கள் எவரும் தாழ்ந்தவர் அல்ல என்று நிரூபித்தனர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள்.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக