பிறகு அந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஊர் ஸ்வயம்சேவகர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு 1930இல் ஏற்பட்ட வருத்தத்தை சரி செய்ய விரும்பினார்கள். ஸ்வயம்சேவகர்கள் எல்லோரும் இணைந்து கோயில் நிர்வாகிகளையும், பூஜாரிகளையும் கலந்து பேசினர். எல்லாம் இறை அம்சம் என்கின்ற போது பட்டியல் சமுதாயத்தை ஒதுக்கி வைத்தல் எப்படி நியாயம் என்று பேசினர். அவர்களும் தங்கள் முன்னோர்கள் செய்ய தவறுக்கு வருந்தி அவர்களை கோயிலுக்குள் அழைக்க வேண்டினர்.
ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் டாக்டர் அம்பேத்கர் வாரிசுகளையும் சென்று சந்தித்தனர். அவர்கள் மீண்டும் கோயிலுக்கு வரவேண்டும் எனவும் அவர்களுக்கு பூரண மரியாதை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
அதை ஏற்றுக் கொண்டு அவர்களும் 2005 ஆம் ஆண்டு கோயிலுக்கு நுழைந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகமும், பூஜாரிகளும் முழு மரியாதை அளித்து கோயிலுக்கு அழைத்து சென்றனர். அத்துடன் தங்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினர்.
ஒரு ஊரில் ஆர். எஸ். எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டால் அந்த ஊரில் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக