நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் மிகச் சிறந்த நீதிபதி. அவர் ஓய்வு பெற்றதும் சென்னையில் உள்ள விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
ராஜபாளையத்தியல் 1979ஆன் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்குவதற்காக நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தவர் திரு. கோவிந்தன்ஜி. இவர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் (முழு நேர ஊழியர்) மற்றும் இப்போதுள்ள திருச்சி, வேலூர், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்டத்தின் அமைப்பாளர்.
ராஜபாளையம் முகாமில் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியாரும், திரு. கோவிந்தன் ஜியும் சந்திக்கிறார்கள். அப்போது திரு. கோவிந்தன் ஜி தன்னை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் என்று அறிமுகப்படுத்தி கொள்கிறார். அப்போது தான் பிறந்த ஊரையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர்கள் இருவருக்கும் சொந்த ஊர்; செங்கற்பட்டு மாவட்டம், ஆத்தூர்.
திரு. கோவிந்தன்ஜி தன்னுடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அறிந்ததும் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.
அப்போது கோவிந்தன் ஜி, “ஐயா 30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் ஊரில் அழுக்குத் துணி எடுத்து சலவை செய்ய ஒரு அம்மா வருவார்கள். நீங்களும் நிறைய உதவி செய்வீர்களே நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம் நன்றாக நினைவிருக்கிறது ஒருநாள் அந்த அம்மா அவங்க பையனை அழைத்து வந்தார். என்ன தம்பி நீ பள்ளிக்கு போகவில்லையா என்று கேட்டேன். வசதியின்மையால் படிக்கவில்லை என்று கூறினான். அவன் படிப்புக்குத் தேவையான உதவிகளை நான் செய்தேன்” என நினைவு கூர்ந்தார்.
“ஆம். ஐயா. அந்த பையன் நான் தான். தாங்கள் செய்த உதவியால்தான் நான் நன்கு படித்தேன். அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். ஈடுபாட்டால் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியராக ஆகிவிட்டேன். இப்போது கோட்ட அமைப்பாளராக ஆகியிருக்கிறேன்”.
நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியமாகி ஆகிவிட்டது. திரு. கோவிந்தன் அவர்களை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்.
நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அங்கிருந்த சங்கத்தின் மூத்த பிரச்சாரக் திரு சூர்ய நாராயணராவ் அவர்களிடம், “நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. திரு. கோவிந்தன் ஜி மூலமாக அனைத்தும் தெரிந்துக் கொண்டேன்” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும் என்று வெளி உலக பொய் பிரச்சாரத்தைக் கவனித்த அவருக்கு உண்மை நிலை புரிந்தது.
அதன் பிறகு சேவாபாரதி தமிழ்நாடு தொண்டு அமைப்பின் புரவலர் பொறுப்பை ஏற்று சேவைப் பணியாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிதர்சனமாகி உள்ளது.
“ஆம். ஐயா. அந்த பையன் நான் தான். தாங்கள் செய்த உதவியால்தான் நான் நன்கு படித்தேன். அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். ஈடுபாட்டால் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியராக ஆகிவிட்டேன். இப்போது கோட்ட அமைப்பாளராக ஆகியிருக்கிறேன்”.
நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியமாகி ஆகிவிட்டது. திரு. கோவிந்தன் அவர்களை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்.
நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அங்கிருந்த சங்கத்தின் மூத்த பிரச்சாரக் திரு சூர்ய நாராயணராவ் அவர்களிடம், “நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. திரு. கோவிந்தன் ஜி மூலமாக அனைத்தும் தெரிந்துக் கொண்டேன்” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும் என்று வெளி உலக பொய் பிரச்சாரத்தைக் கவனித்த அவருக்கு உண்மை நிலை புரிந்தது.
அதன் பிறகு சேவாபாரதி தமிழ்நாடு தொண்டு அமைப்பின் புரவலர் பொறுப்பை ஏற்று சேவைப் பணியாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிதர்சனமாகி உள்ளது.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக