வியாழன், 21 டிசம்பர், 2023

அனைவருக்கு ஆலயம் - சாதித்த ஆர்.எஸ்.எஸ்.



ராமநாதபுரம் அரண்மனையில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது. சேதுபதி மகாராஜாவின் மகளை திருமணம் செய்த ஜமீன் பட்டணம் சாமி பரம்பரையில் வந்தவர் ஆத்மநாத சுவாமி. அரண்மனையில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். தினசரி பண்பு பயிற்சியில் ஈர்க்கப்பட்டு அவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஐக்கியமானார். ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவராகவும் பொறுப்புக்கு வந்தார்.

முதுகுளத்தூர் தாலுகா, பிரபுக்கலூர் அரண்மனை முருகன் கோவிலில் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அரண்மனை வழக்கப்படி முதல் மரியாதை பெற வேண்டிய ஆத்மநாத சுவாமி, வரவை எதிர்பார்த்து ஊர் பிரமுகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஆத்மநாத சுவாமி கோவில் பந்தலுக்குள் வராமல் வெளியே நின்று கொண்டிருந்தார். பிரதான பூஜை நடைபெறும் போது அவரை உள்ளே வரும்படி ஊர் பெரியவர்கள் அழைத்தனர். ஆனால் ஆத்மநாத சாமி அவர்கள் உள்ளே வராமல் அமைதியாக வெளியே நின்று கொண்டிருந்தார்.

 ‘ஐயா பூஜை நேரம் ஆகிறது. உள்ளே வாங்க’ என்று பலரும் குரல் கொடுத்தனர்.

‘இல்லை நான் வரவில்லை’ என்றார் ஆத்மநாத சுவாமி. ‘ஐயா ஏன் வர மறுக்கிறீர்கள்? ஒன்றும் புரியவில்லையே? என்றார்கள் பெரியவர்கள்.

‘இந்த ஊர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்பொழுது நம் முருகன் கோயிலுக்கு உள்ளே வந்து சாமி தரிசனம் செய்கிறார்களோ அப்போதுதான் நானும் தரிசனம் செய்வேன்’ என்று உறுதியாக சொன்னார் ஆத்மநாத சுவாமி.

அங்கேயே ஊர் நாட்டாமைகள் சேர்ந்து கூட்டம் போட்டு ஆலோசனை செய்தனர். ஆத்மநாத சுவாமி அவர்கள் சொன்ன பிறகு எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை என்று கூறினார்கள்.

அதன்படி ஆத்மநாத சாமியோடு பட்டியல் சமுதாய மக்களையும் கோவிலுக்கு வர அனுமதித்தனர். அதோடு ஜாதிய ஏற்றத்தாழ்வு அங்கு அகன்றது.

#
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக